மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம்

மார்கண்டேய கட்ஜு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் சென்ற வாரம் தி வீக் (The Week) https://www.theweek.in/leisure/society/2018/09/18/justice-katju-whatever-his-motives-periyar-helped-british.html  எனும் வாரப்பத்திரிக்கையில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டு அதில் பெரியார் அவர்கள் ”செய்த செயல்கள் எதுவாயினும் அவர் ஆங்கிலேயரின் ஆட்சி தொடர்வதை விரும்பினார் அதே போன்று இந்தியாவிற்கு விடுதலை வேண்டாம் என்று கூறினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பதிவு பெரியார் அப்படி சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால் ஏன் அப்படி செய்தார் … Continue reading மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம்

பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

சொர்க்கம் நரகம் என்பதனையே அடிப்படையாக கொண்டு உள்ள அனைத்து மதங்களும் நல்லவை செய்தால் சொர்க்கமும் அல்லவை செய்தால் கொடிய நரகமும் கிடைக்கும் என்று குழந்தைகளை ஏமாற்றும் விதமாக அச்சம் இச்சை ஆச்சயர்ததை காட்டியே மக்களை அழைத்துச் செல்கின்றது. பெரியாருக்கு சொர்க்கம் நரகத்தை பற்றிய நம்பிக்கை இல்லை என்றாலும் சொர்க்கம் நரகம் பற்றிய சிந்தனையாளர்களை பொறுத்தவரை பெரியார் சொர்க்கத்திற்கோ அல்லது நகரத்திற்கோ சென்றிருப்பார் என்ற அவர்களின் சித்தாந்தத்தின் படி பதிவின் சிந்தனையை தொடருவோம் தமிழகத்தில் தந்தைப் பெரியாரை ஒரு … Continue reading பெரியாருக்கு சொர்க்கமா நரகமா??

வர்ண தர்மம் ஓர் ஆய்வு

  வர்ண தர்மம் பிரம்மாவின் முகம், புஜங்கள் , தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்கட்கு அந்தந்த உருப்புகளின் கார்யங்களாகிய வேத அத்யயனம், சத்துருக்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற கார்யங்கள் முறையே விதிக்கப்பட்டுள்ளன. அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்கட்கு நற்கதியும் , செய்யாதவர்கட்கு துர்கதியும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேதத்தையும் பிரம்ம ஜ்ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் பிராம்மணன் ஆவன். ஆபத்திலிருந்து காப்பவன் ஷத்ரியன் ஆவான். வியாபார நிமித்தம் தேச ஸஞ்சாரம் செய்கிறவன் வைசியன் ஆவான். முற்கூறிய மூன்று … Continue reading வர்ண தர்மம் ஓர் ஆய்வு

1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

நாம் கடந்து வந்த பாதை தொகுப்பில் கல்மாடும் கல்நெஞ்சும் கட்டுரைக்கு அடுத்து மற்றுமொரு பதிப்பு. இந்திய இரயில் நிருத்தங்களில் இருந்த உணவகங்களில் இருந்த சாதி முறை. தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருந்த C.S.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் 1926 குடியரசு’ல் பதிப்பிக்கப்பட்டது தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல் வகையறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளை வாங்கி ஓட்டல் வைத்திருக்கும் … Continue reading 1926ல் தென்னிந்திய ரெயில்வே உணவகத்தின் நிலை

இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

ஜெயேந்திரன் சொல்லித்தான் சங்கரராமனை கொலை செய்தேன் என்று அப்பு கூறியும் செயேந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஒரு வழக்கில் 80% சாட்சிகள் பிழற்சாடியாக மாறியதைக்கூட நீதிமன்றங்கள் சந்தேகமாக பார்க்கவில்லை. காஞ்சி மடத்தில் பல ஊழல் நடக்கிறது என்று கூறிய சங்கரராமனை கொலை செய்யப்பட்டாலும் அப்படி அவர் கூறிய ஊழலை விசாரித்ததா நீதிமன்றம் ஜெயேந்திரன் நீதிபதியுடன் தீர்ப்புக்காக பேரம் பேசியதற்குக்கூட வழக்க பதியப்படவில்லை கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்புக்கு பின் புதுவை அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாதது போன்ற … Continue reading இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

நான் பணி நிமித்தமாக இங்கிலாந்துக்கு இரண்டு வாரங்கள் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் என்னை இந்திய பூர்வீகக்குடி என்று அழைத்தனர், நான் ஒரு foreigner  என்றே கூறினர். இதனை தமிழில் கூறினால் பிற மண்ணினன் (நான் குடியேறிய நாடுக்கு உரியவன் அல்ல நான் வேறு மண்ணை சேர்ந்தவன்) என்று பெயர் பெற்றிடலாம். அப்படி பார்த்தால் தன் மண்ணை விட்டு வேற்று மண்ணுக்கு எவனொருவன் செல்கின்றானோ அவன் தான் சென்ற நாட்டை பொறுத்தவரை பிறாமணன் ஆகிறான். அப்படி இரண்டு வார காலத்துக்கு நான் … Continue reading நீங்கள் பிறாமணராக வேண்டுமா??

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

தந்தைப் பெரியாருக்கு முன், தந்தைப் பெரியாருக்கு பின் என்ற இரண்டு நிலைகளை நாம் ஆராய்வோம். இதனை படிப்பவர்களும் உங்களின் வீட்டிலோ வட்டாரத்திலோ உள்ள முதியோர்களிடம் கேளுங்கள், இன்றைய சுதந்திர காற்றின் விலை என்ன என்று புரியும் தந்தைப் பெரியாரின் புரட்சியால் தமிழர் கோயில் மற்றும் மதத்திற்கு  ஏற்பட்ட சீர்திருத்தம் குத்தூசி குருசாமியின் “கல்மாடும் கல்நெஞ்சும்” என்ற புத்தகத்தில் -  7-8-1950 ஆம் ஆண்டு கும்பக்கோணம் கும்பேசுவரன் கோயிலில் உள்ள வெளிபுற நந்தியை நெ.பெரியசாமி என்பவர் தொட்டதால் அங்குள்ள அக்கிரகாரத்து … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 3

தீண்டாமை - குடி அரசு - சொற்பொழிவு - 25.04.1926 குறிப்பு:-காரைக்குடி-சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு 6-4-26-ந் தேதி  பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. “இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை, ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத்திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 3

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தந்தைப் பெரியாரின் குடி அரசு இதழில் 7-03-1926 வெளியானது. கட்டுரை சற்று பெரிதாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு தமிழர்களுக்கும் 1926 தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க உதவும். கடைசி தமிழன் இருக்கும் வரை தந்தைப் பெரியாரின் தமிழின எழிச்சியும் புரட்சியும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பு:- கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன்.   சமஸ்கிருதம் நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம் … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2