இவர்கள் ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தால்?

shankracharya_police_20041213

  • ஜெயேந்திரன் சொல்லித்தான் சங்கரராமனை கொலை செய்தேன் என்று அப்பு கூறியும் செயேந்திரனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
  • ஒரு வழக்கில் 80% சாட்சிகள் பிழற்சாடியாக மாறியதைக்கூட நீதிமன்றங்கள் சந்தேகமாக பார்க்கவில்லை.
  • காஞ்சி மடத்தில் பல ஊழல் நடக்கிறது என்று கூறிய சங்கரராமனை கொலை செய்யப்பட்டாலும் அப்படி அவர் கூறிய ஊழலை விசாரித்ததா நீதிமன்றம்
  • ஜெயேந்திரன் நீதிபதியுடன் தீர்ப்புக்காக பேரம் பேசியதற்குக்கூட வழக்க பதியப்படவில்லை
  • கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்புக்கு பின் புதுவை அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாதது

போன்ற சலுகைகள் மற்றவருக்கு கிடைக்குமா????

 

1936 பார்ப்பனர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க நடந்த போராட்டம். குடியரசில் அச்சான செய்தி பகிரப்பட்டுள்ளது

வர்ணாசிரம தர்மத்தில் பிறாமணன் தவறு செய்தான் என்று தீர்ப்பளித்தாலே போதுமாம் அது தண்டனைக்குச் சமமாம்.

பார்ப்பனக் கிளர்ச்சி :- குடி அரசு கட்டுரை 03.05.1936

சென்னை மாகாண த்திலே வருஷந்தோறும் எத்தனையோ பேர் கொலைக் குற்றத்துக்கும், கொள்ளைக் குற்றத்துக்கும் தண்டிக்கப்படுகிறார்கள்.ஆனால் அதற்காக எந்த சமூகமும் ஒன்றாகத் திரண்டு புரளி செய்தது கிடையாது. பெயர் பெற்ற கருங்குழிப் பிரதேசப் பார்சல் வழக்கில் தோழர் ராமநுஜய்யங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தென்னாட்டுப்பார்ப்பன சமூகம் ஒன்றாகத் திரண்டெழுந்தது. சென்னையில் பிரபலம் பெற்ற பார்ப்பன லாயர்கள் எல்லாம் அந்தக் கேசில் கவனம் செலுத்தலாயினர். ஹைக்கோர்ட்டு செஷன்சில் அவ்வழக்கு விசாரணை நடந்தது. மேல் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்ய விசேஷ அனுமதி வேண்டுமாம். பிரஸ்தாப வழக்கின் போக்குக்கு விசேஷ அனுமதியளிக்கவே இடமில்லையாம். எனினும் விசேஷ அனுமதியளிக்கும் அதிகாரமுடையவர் கிளர்ச்சி செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவராயிருந்ததினால் விசேஷ அனுமதியும் கிடைத்தது. ஹைகோர்ட் புல் பெஞ்சில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹைக்கோர்ட்டு செஷன்ஸ் தீர்ப்பில் தலையிடத் தமக்கு அதிகாரமில்லையென்று புல் பெஞ்சு தீர்ப்பும் பிறந்தது. அப்பால் பிரிவி கௌன்சிலுக்கு அப்பீல் அனுமதிகோரப்பட்டது. அதற்கும் சென்னை ஹைக்கோர்ட்டார் அனுமதியளிக்கவில்லை. உடனே, பிரிவி கௌன்சிலுக்கே நேரடியாக விண்ணப்பம் செய்யப்பட்டது. பிரிவி கௌன்சிலும் கிளர்ச்சிக்காரருக்கு அனுகூலமாக முடிவு கூறவில்லை. அப்பால் சென்னை சர்க்காருக்கு எதிரிக்கு கருணை காட்டும்படி மனுச்செய்யப்பட்டது. அம்முயற்சியும் பலிக்கவில்லை. கடைசியில் வைஸ்ராய்க்கு விண்ணப்பம் செய்யப்பட்டு மரணதண்டனை ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கிடையில் எதிரிக்கு சிறைச் சாப்பாடு பிடிக்கவில்லையென்றும், பழ உணவு வழங்க வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்யப்பட்டு சர்க்கார் அனுமதியின் பேரில் ராமானுஜய்யங்கார் பழ உணவு உண்டு வருவதாகவே நமது ஞாபகம். எதிரி பெரிய பணக்காரருமல்ல,ஜமீன்தாருமல்ல. லக்ஷக்கணக்காகச் செலவு செய்ய சக்தியுடையவர்களுக்குத்தான் விசேஷ அனுமதி பெறவும் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்யவும், பிரிவி கௌன்சிலில் விண்ணப்பம் செய்யவும், மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் கருணை மனுஅனுப்பவும், வைஸ்ராயிடம் நேர்முகமாக வாதாட லாயர்களை அமர்த்தவும் முடியும். எனினும் எதிரி ஒரு பார்ப்பனராயிருந்ததினாலும் பார்ப்பன சமூகம் முழுதும் அவர் விஷயத்தில் அநுதாபம் காட்டியதினாலும், லக்ஷக்கணக்காக பீஸ் வாங்கும் பார்ப்பன லாயர்கள் அவருக்காக இனாமாய்ப் பேசவும் முயற்சி செய்யவும் முன் வந்ததினாலும் எந்தக் கொலைக் கேசிலும் உண்டாயிராத கிளர்ச்சியும் பரபரப்பும் தோழர் ராமாநுஜம் கேசில் உண்டாயிற்று. வைஸ்ராயிடம் விண்ணப்பம் செய்து கொண்டது மூலம் தோழர் ராமாநுஜத்தின் மரணதண்டனை ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாறியபிறகுதான் மரணதண்டனையை ரத்து செய்ய மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் அதிகாரமுண்டென்ற உண்மையை சாமானிய மக்கள் அறியலானார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளும் வக்கீல்களும் ஒன்று சேர்ந்து குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு கிளர்ச்சி செய்ததினால் தோழர் ராமாநுஜம் வழக்கு அமிதமாக விளம்பரமுமாயிற்று. தோழர் ராமாநுஜம் விஷயமாக பார்ப்பனர் கிளர்ச்சி செய்ததையோ, அவரது மரண தண்டனை ஆயுட்கால தண்டனையாக மாறியதையோ இதர சமூகத்தார் ஆட்சேபிக்கவு மில்லை லக்ஷ்யம் செய்யவுமில்லை. ஆனால் தோழர் கோவை ரத்தினசபாபதி கவுண்டரின் சிறைவாச தண்டனையை வைஸ்ராய் ரத்து செய்ததைக் கண்டித்து பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன லாயர்களும், பார்ப்பன மாஜி நீதிபதிகளும் கிளர்ச்சி செய்வது பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறது. தோழர் ராமாநுஜ
ய்யங்கார் மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைவாச தண்டனையாக மாற்றிய வைஸ்ராய்தான் தோழர் ரத்தினசபாபதி கவுண்டரின் சிறைத் தண்டனையை ரத்து செய்திருக்கிறார். ராமாநுஜத்துக்கு நியாயம் வழங்கிய வைஸ்ராய் கௌண்டர் விஷயத்தில் மட்டுமா நியாய ரஹிதமாக நடந்துகொள்வார்?

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறாமணருக்கு மரண தண்டனை 1930 வரை இல்லை

நாகர்கோவில் மகாநாடு குடி அரசு – தலையங்கம் – 19.01.1930
பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் எத்தனைப் பேர்களைக் கொன்றாலும் மற்றவர்களைப் போல் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதாக இப்போது திருவாங்கூரில் சட்டமிருக்கின்றது. ஏனெனில் மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளபடி திருவாங்கூர் ராஜ்யம் அரசாளப்படுவதால் இம்மாதிரியான சட்டம் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் திருவாங்கூரில் பார்ப்பனர்கள் யாரைக் கொலை செய்தாலும் செய்யலாம். ஆனதால் அம்மாதிரி இனி நடவாமல் இருக்கும்படி கொலைக்குற்றம் செய்தால் பார்ப்பனராயிருந்தாலும் மற்றவர்களுக்கு விதிப்பது போல மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.