திருமூலர் தரும் குரு வழிபாடு – பாகம் 2

சென்ற பதிப்பின் (திருமூலர் தரும் குரு வழிபாடு)  தொடர்ச்சி (குருதேவர் அருளிய ”திருமூலர் தரும் குரு வழிபாடு” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி ) நவநாத சித்தரான திருமூலர், “மனித வாழ்வு மிகமிக அற்பமானது என்பதை ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்த்திட்டால் ஆசை, ஆணவம், அகம்பாவம், வீம்பு, போட்டி, பொறாமை, பெருமை ...... முதலியவைகளை யெல்லாம் விட்டொழித்து விட்ட மெய்யான குருவைச் சார்ந்தொழுகிப் பொய்யுலக மாயைகளை வென்றிடுவர்” என்ற கருத்தை விளக்க மனித வாழ்வைச் சில பாடல்களில் … Continue reading திருமூலர் தரும் குரு வழிபாடு – பாகம் 2

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

  குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் (தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாரிசு) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து     புத்தாண்டு ஆங்கிலேயருடையது, அவணியெல்லாம் விழாவாகிறது. எத்திசையோரும் ஏற்றுப் போற்றுவது போலவே போற்றுகிறோம். இத்திருநிலை தமிழ்ப் புத்தாண்டு பெற்றிடவே ஏற்போம் உறுதி நினைத்தவர் வதைத்துத் துவைத்து அழித்திடத் தமிழினம் இத் தரணி யெலாம் கூலியாய் ஏமாளியாய் வேலியிலாப் பயிராய் இனத்துரோகி விரோதி கங்காணிகளால் வாழ்வதைத் தடுப்போம் தன்னலப் … Continue reading ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

திருக்குறள் உலக பொது மறையா???

திருக்குறளை உலகப் பொது மறை என்று பலரும் கூறிவருகிறார்கள். திருக்குறள் மறையா அல்லது வேதமா பற்றிய சொல்லாய்வைப் பார்ப்போம். மறை என்றால் என்ன?  மறைத்து வைப்பது ->  யாருக்கும் தெரியாமல் மறைத்துகொள்வது என்று பொருள் பட தான் இந்த மறை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. அப்படி பார்த்தால் திருக்குறள் என்பது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? மறை என்ற சொல்லை பலரும் பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக சமசுகிருத வேதத்தினை தமிழில் மறை என்றும் (வேதம் என்றால் வடமொழி சொல் என்றும் … Continue reading திருக்குறள் உலக பொது மறையா???

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை – 2

இனி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கி அருளிய குருபாரம்பரியத்தினையும், இந்து வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறநானூற்று பாடலுக்கான ஆய்வினைப் பார்க்கலாம். 1) யாதும் ஊரே! யாவரும் கேளிர்! - உலகில் முதலில் தோன்றிய நிலப்பரப்பில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றிட உயிரினங்களின் தலைவன் போன்ற நிலையைப் பெற்ற மணீசர்களுக்கு மூலப் பதினெண்சித்தர்கள் கற்றுக் கொடுத்த மொழி தமிழ்மொழி. பிற்காலத்தில் கடல்கோள்களினால் பிற நிலப்பரப்புக்கள் கடலுக்கு உள்ளிருந்து வெளிவந்த போது, அங்கெல்லாம் குடியேறி வாழ்ந்தவர்கள் இந்தத் தமிழ் பேசிய மனிதர்களே! எனவே அனைத்து உலகப் பகுதிகளும் வாழக் கூடிய ஊர்களே என … Continue reading யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை – 2

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1

தமிழில் பேச்சாளர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பேசச் சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோளாகக்காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களைப் பேசச் சென்று விடுவார்கள். அதேபோல், இப்படிப் பேசுபவர்களில் ஒருவராவது இந்தப் பழந்தமிழ் பாடலை முழுமையாகப் படித்திருப்பார்களா; அப்படியே படித்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்திருப்பார்களா என்று வினா எழுப்பிச் சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில் அண்மையில் மறைந்த … Continue reading யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1